‘சகாப்தம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கியவர் சண்முகபாண்டியன். இந்தப்படம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. அதன் பின் அவர் ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில், தன்னுடைய தந்தை விஜயகாந்துடன் சேர்ந்து நடிப்பதாக அறிவிப்புகளும், புகைப்படங்களும் வெளியானது. ஆனால், ஒரு சில காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டது.