திருப்பதியில் விஜயகாந்த் ; கோபப்பட வைத்த மக்களும், நிருபர்களும் (வீடியோ)

வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (12:07 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த்  குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்று வந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 

 
கோபம் வந்தால், பொது இடங்களில் விஜயகாந்த் எப்படி நடந்து கொள்வார் என எல்லோருக்கும் தெரியும். அது ரசிகன், தொண்டர், மக்கள், நிருபர் என யாராக இருந்தாலும் சரி. கோபத்தை அங்கேயே காட்டி விடுவார்.
 
சமீபகாலமாக விஜயகாந்த் பொது இடங்களில் தலை காட்டுவதில்லை. அவரது உடல் நிலையில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தது. 
 
இந்நிலையில், விஜயகாந்த் தன்னுடைய குடும்பத்தோடு திருப்பதி சென்றிருந்த போது, அங்கு பொதுமக்கள் மற்றும் நிருபரகளிடம் அவர் கோபமாக நடந்து கொண்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 
ஆனால், இந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது இல்லை, ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தது என சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்