'ராட்டினம்' என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ், அடுத்து 'கல்கண்டு' என்ற படத்தைத் தயாரித்து வருகின்றனர். ஏ.எம்.நந்தகுமார் இயக்கும் இந்தப் படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
சில நகைச்சுவை நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். அது நியாயம் தானா! நான் 1500 ரூபாய் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஒருவர், இன்று கோடிக் கணக்கில் கேட்கிறாராம். நான் அவர் பின்னால் போனதில்லை. அந்தக் காலத்தில் ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரம் ஒரு படத்தில் நடித்தே அந்தத் தயாரிப்பாளரையும் மக்களையும் சிரிக்க வைத்தார். இன்று தயாரிப்பாளரை அழ வைத்து, மக்களைச் சிரிக்க வைக்கிறார்கள் என்று பேசினார்.