ஒரு படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தை கமிட் செய்துவிடுகிறவர், விஜய். கடந்த பத்து பதினைந்து வருடங்களாக இப்படி நான் ஸ்டாப்பாக நடித்து வருகிறார். புலி வெளியாகும் முன்பே அட்லி இயக்கும் புதிய படத்தை விஜய் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது அட்லி படம் பாதி கிணறு தாண்டியிருக்கும் நிலையில், அடுத்தப் படம் குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளார். சமீபத்திய தகவல், விஜய் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை, அஜித்தின் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிப்பார் என கூறப்படுகிறது.