சிங்கிள் டேக்கில் பாடிய விஜய்; வியந்துபோன இசையமைப்பாளர்!

புதன், 2 நவம்பர் 2016 (18:02 IST)
நடிகர் விஜய் தற்போது நடிதது வரும் ‘பைரவா’ படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் பாடிய பாடலின் ஸ்டைலைப் பார்த்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வியந்துள்ளார்.

 
 
விஜயின் இரண்டாவது படத்திலேயே அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு என்ற பாடலை பாடியவர். பின்னர் நடித்த படங்களில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். சிறிது இடைவெளிக்கு பிறகு தலைவா, துப்பாக்கி, ஜில்லா, கத்தி ஆகிய படங்களில் திரும்பவும் பாடினார்.
 
தற்போது அவர் நடித்து வரும் ‘பைரவா’ படத்திலும் அவர் ஒரு டூயட் பாடலை பாடியுள்ளார். வழக்கம்போல இந்த பாடலின் டியூனை முன்பே கேட்டு வாங்கிய விஜய், ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து, பல்லவி, சரணம் என பிட் பிட்டாக சிங்கிள் டேக்கில் பாடிக்கொடுத்து விட்டாராம். இதைப் பார்த்த சந்தோஷ் நாராயணன் வியந்து போயிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்