உலகம் நம்புவதற்கு முன் என்னை நம்பியவர் விஜய்

வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (10:02 IST)
புலி அக்டோபர் 1 வெளியாகிறது. அப்படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார், தனி ஒருவனை இயக்கிய மோகன் ராஜா.


 

 
தொடர்ந்து ரீமேக் படங்களாக எடுத்து வந்த மோகன் ராஜாவை முன்னணி நடிகர்கள் யாரும் பெரிதாக கண்டு கொண்டதில்லை. அவரது படங்கள் வெற்றி பெற்றாலும், ரீமேக் படங்கள்தானே என்று ஓர் அலட்சியம்.
 
இந்நிலையில், விஜய் வேலாயுதம் படத்தின் மூலம் மோகன் ராஜாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பை அளித்தார். அக்டோபர் 1 புலி வெளியாகயிருக்கும் நிலையில், அப்படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்திருக்கும் மோகன் ராஜா, 
 
"எப்போதும் வெற்றிப் படங்களை கொடுக்கும் என்னை உலகம் நம்புவதற்குமுன் என்னை நம்பிய முதல் ஹீரோ விஜய்" என குறிப்பிட்டுள்ளார்.
 
கரெக்ட்தானே.

வெப்துனியாவைப் படிக்கவும்