துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருக்கிறார்கள் என்று எதிர்ப்பு குரல் கிளம்பியதும், என்னுடைய மகன் (விஜய்) அடுத்தப் படத்தில் முஸ்லீமாக நடிப்பார் என ஒரு காம்ப்ரமைஸ் அறிக்கைவிட்டார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்.
கத்தி படத்தில் தர்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் வருகின்றன. அதனை எடுப்பதற்காக ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள புகழ்பெற்ற தர்காவை தேர்வு செய்து காட்சிகளையும் படமாக்கினர். படப்பிடிப்பின் போது விஜய்யும், முருகதாஸும் தர்காவில் தொழுகை நடத்தியுள்ளனர். தொழுகை நடத்தியது மனதுக்கும் உடம்புக்கும் புத்துணர்ச்சியையும், நிம்மதியையும் தந்ததாக முருகதாஸ் கூறினார்.
யுவன், ஜெய் இருவரும் இஸ்லாம் மார்க்கத்தில் பிடிப்பு ஏற்பட்டு தர்கா, தொழுகை என்று தீவிரமாக இயங்குவது போல் விஜய்யும் மாறிவிட்டாரோ என நினைக்க வேண்டாம். இது படப்பிடிப்புக்குப் போன போது நடத்திய தொழுகைதான்.