ஒன்றல்ல, ரெண்டல்ல…விஜய் படத்துக்கு இவ்வளவு சிறப்பா?

புதன், 26 ஜூலை 2017 (18:00 IST)
விஜய் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்தின் சிறப்பைப் பட்டியலிட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள். 


 

 
விஜய் மூன்று வேடங்களில் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. இந்த மாத இறுதியுடன் ஷூட்டிங் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் படத்துக்கு கிடைத்துள்ள சிறப்பைப் பட்டியலிட்டுள்ளனர் ரசிகர்கள்.
 
முதலாவது, விஜய் ஹீரோவாக அறிமுகமாகி இது 25வது வருடம். அதாவது, ‘நாளைய தீர்ப்பு’ வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இரண்டாவது, ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இது 25வது வருடம்.
 
மூன்றாவது, இந்தப் படத்தைத் தயாரித்துவரும் தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனத்துக்கு இது 100வது படம். எனவே, இந்தப் படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் சிறப்பான படமாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்