அழகிய தமிழ் மகன் அனைவரும் எதிர்பார்த்த படம். விஜய்யே அப்படத்தை அதிகம் எதிர்பார்த்தார். ஒன்றுக்கொன்று முரணான இரண்டு வேடங்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்று அட்டகாசமான பேக்கேஜ். திரைக்கதையில் கோட்டைவிட்டதால் பாக்ஸ் ஆபிஸில் கோட்டைவிட்டது படம்.
அதன் பிறகு பரதன் பல படங்களுக்கு வசனம் எழுதினார். அதில் வீரம் படமும் ஒன்று. அவர் சொன்ன கதை விஜய்க்குப் பிடித்துப் போக, அரை டஜன் இயக்குனர்கள் காத்திருக்க, அவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி பரதனுக்கு வாய்ப்பளித்துள்ளார்.