கவலைக்கிடம் - தொடர்ந்து அவசரப் பிரிவில் மனோரமா

சனி, 7 ஜூன் 2014 (14:17 IST)
நடிகை மனோரமாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
மனோரமாவை ஆரோக்கிய குறைபாடு கடந்த சில வருடங்களாகவே அலைக்கழித்து வருகிறது. ஏற்கனவே அவருக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் கால் மூட்டில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். சமீபத்தில் வீட்டில் தவறிவிழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டது.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
தொடர்ந்து மனோரமா தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரதுநிலை மோசமாக இருப்பதாகவும் ஒருநாள் கழிந்த பிறகே எதுவும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்