அந்த படத்தை நான் இயக்கவில்லை: வெங்கட் பிரபு

வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (16:01 IST)
சென்னை 28 படத்தின் மூல இயக்குனராக அறிமுகம் ஆனவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து சரோஜா,கோவா,மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் சென்னை-28 பத்தின் 2ம் பாகத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் இவர் அடுத்து சரோஜா படத்தின் 2ம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.


 

இது குறித்து வெங்கட் பிரபு கூறுகையில், தற்போது நான் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளேன். என்னுடைய அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில், இப்படி வதந்தி பரவி வருகிறது. சரோஜா - 2 படத்தை பற்றி நான் சிறிதளவு  கூட யோசித்தது இல்லை. எப்படி 2007 ஆம் ஆண்டு 'சென்னை 28'   தமிழக  ரசிகர்கள் மத்தியில் ஒரு அற்புதத்தை ஏற்படுத்தியதோ, அதே போல் 2016 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகமும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தும் என்றார் இயக்குனர் வெங்கட் பிரபு.

வெப்துனியாவைப் படிக்கவும்