பஞ்சாபில் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம், மனித உரிமைகள் விழிப்புணர்வு கூட்டமைப்பு. இந்த நிறுவனம், உத்தா பஞ்சாப் படத்தை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
விவசாய மாநிலமான பஞ்சாபை இப்படம் தவறாக சித்தரித்துள்ளது என்று கூறி தடை கேட்டுள்ளனர். மேலும், தணிக்கை வாரியத்தின் முடிவில் மும்பை உயர்நீதிமன்றம் தலையிட்டிருக்கக் கூடாது எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.