உதயநிதியின் ஆசையை புஸ்ஸாக்கிய பாண்டியராஜன்

திங்கள், 20 ஏப்ரல் 2015 (14:52 IST)
ஆண்பாவம் படத்தின் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்பது உதயநிதியின் நீண்டநாள் ஆசை. ஆனால், அதற்கு வழியில்லாமல் செய்துவிட்டார் பாண்டியராஜன்.
 
பாண்டியராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்த படம் ‘ஆண் பாவம்’. இப்படம் 1985ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் பாண்டியராஜன், பாண்டியன், சீதா, ரேவதி என பலர் நடித்திருந்தார்கள். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது இப்படத்தை மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளார் பாண்டியராஜன். 
 
இன்றைய காலத்திற்கு ஏற்ப கதை, திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்து மீண்டும் பாண்டியராஜனே இயக்கும் படத்திற்கு ஆண்பாவம் 99% என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் பாண்டியராஜன் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இன்னொரு கதாநாயகன், 2 கதாநாயகிகள் மற்றும் இவர்களுடன் நடிக்கும் நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்