இந்த வாரம் இருவர் வெளியேற்றப்படுவார்களா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

திங்கள், 23 நவம்பர் 2020 (15:20 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். மேலும் சுரேஷ் மற்றும் அஜீம் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி என்றால் மொத்தம் 16 போட்டியாளர்கள் ஆகிவிடுவார்கள் 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் முதல் நாளில் எத்தனை போட்டியாளர்கள் இருந்தார்களோ அதே அளவில் தான் இன்னும் உள்ளனர். இன்னும் 50 நாட்களில் இறுதிப்போட்டியில் 3 பேர் கலந்து கொள்வார்கள் என்றாலும் மீதி உள்ள 13 போட்டியாளர்களை 50 நாட்களில் எப்படி வெளியேற்ற முடியும் என்ற கேள்வி எழுந்து உள்ளது 
 
இந்த நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒருவர் வாக்குகளின் அடிப்படையிலும் இன்னொருவர் பிக்பாஸ் விதிமுறைகளை மதிக்காதவர் என்ற அடிப்படையிலும் என இரண்டு பேர் வெளியேற்றப்படலாம் என்ற தகவல் பரவி வருவதால் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்