பன்றி காய்ச்சலுக்கு இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்தி நடிகை சோனம் கபூரை பன்றி காய்ச்சல் தாக்கியதைத் தொடர்ந்து சினிமா நட்சத்திரங்களையும் பீதி ஆட்டிப் படைக்கிறது. பன்றி காய்ச்சல் சுகாதாரமில்லாத சேரிகளில் வாழ்கிறவர்களை மட்டுமே தாக்கும் என்று இறுமாந்திருந்தவர்களுக்கு சோனம் கபூர் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.