சரி, மும்பைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை வைத்து சென்சார் செய்யலாம் என முயன்றுள்ளனர். அவர்களின் துரதிர்ஷ்டம். சென்சார் சான்றிதழ் தர லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சில அதிகாரிகள் இப்போதுதான் கைது செய்யப்பட்டனர். அதனால் மும்பையில் சென்சார் செய்ய முடியாது என்று அங்குள்ளவர்கள் கைவிரிக்க மீண்டும் கர்நாடக தணிக்கைக் குழுவுக்கே படத்தை திரையிட்டு காட்ட முயற்சித்து வருகின்றனர்.