அணியும் வாங்கலை துணியும் வாங்கலை ஆளை விடுங்கப்பா

வெள்ளி, 30 ஜனவரி 2015 (11:01 IST)
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விற்பனைக்கு வந்துள்ளது. அதனை வருண் மணியனும், அவரது வருங்கால மனைவி நடிகை த்ரிஷாவும் இணைந்து வாங்கவுள்ளதாக சில தினங்கள் முன்பு செய்தி பரவியது. நாமும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.
 
ஆனால், அப்படி எந்த ஐடியாவும் இல்லை. என்னை தனியா விட்டுருங்க என்று வருண் மணியன் கூறினார்.
 
த்ரிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு வருண் மணியனின் தலையில் தேவையில்லாமல் மீடியா எண்ணைய் தேய்க்கிறது. விஐபி நடிகையின் கணவரானால் இதுபோன்ற தொந்தரவு இருக்கதான் செய்யும்.
 
சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே ஊழலில் விழுந்து புரண்டுள்ளது. அதை வாங்கும் எந்த திட்டமும் இல்லை என்று அவர் வறியுள்ளார். அதேநேரம் படத்தயாரிப்பில் முன்பைவிட தீவிரமாக அவர் இறங்கிய்ள்ளது முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்