நிச்சயதார்த்த செய்திக்கு த்ரிஷா மறுப்பு

செவ்வாய், 18 நவம்பர் 2014 (12:20 IST)
த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தியை த்ரிஷா மறுத்துள்ளார்.
 
கடந்த சில தினங்களாகவே த்ரிஷாவுக்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வலம் வந்தன. அந்த தொழிலதிபர் வாயை மூடிப் பேசவும் படத்தை தயாரித்த வருண் மணியன் என சில ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
 
இதுகுறித்து விளக்கம் பெற த்ரிஷாவையும், அவரது அம்மாவையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரேயொரு ஆங்கில நாளிதழின் செய்தியாளருக்கு, இப்போதைக்கு எது குறித்தும் சொல்ல முடியாது என த்ரிஷா குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
 
மறுப்பு தெரிவிக்காததால் நிச்சயதார்த்த செய்தியை இன்றைய நாளிதழ்கள் உறுதி செய்து வெளியிட்டன (நாமும்தான்). இவ்வளவு நடந்த பிறகு தனது ட்விட்டரில், எனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி உண்மையில்லை. அப்படி நடந்தால் நானே தெரிவிப்பேன் என்று த்ரிஷா கூறியுள்ளார்.
 
நெருப்பில்லாமல் புகையாது. அந்த நெருப்பு என்ன..? புலனாய்வு பத்திரிகைகளில் ஒருவேளை வெளிவரக்கூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்