அப்பாடக்கரில் நாய் சினேகிதியாக நடிக்கும் த்ரிஷா

புதன், 25 பிப்ரவரி 2015 (09:51 IST)
சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடித்துவரும் படம், அப்பாடக்கர். தற்போது பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 

 


 
இந்தப் படத்தில் மாடர்ன் கேர்ளாக த்ரிஷா நடிக்கிறார். முக்கியமாக நாய்களின் மீது ப்ரியம் உள்ளவராக அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
நிஜத்திலும் த்ரிஷா ஒரு நாய் சினேகிதி. தெருநாய்களின் நலனில் அக்கறை உள்ளவர். தெருவிலிருந்து ஒரு நாயை எடுத்து அதற்கு கேட்பரி என பெயரிட்டு வளர்த்து வந்தார். சமீபத்தில் அந்த நாய் இறந்தது.
 
தெருநாய்களின் நலனில் அக்கறை கொண்டு சென்னை மேயருக்கு த்ரிஷா கடிதமும் எழுதியிருந்தார். அவரைப் பொறுத்தவரை அப்பாடக்கர் கதாபாத்திரம் ஒரு ரியல் லைஃப் கேரக்டர்.
 
த்ரிஷாவின் நாய் பாசம் பாராட்டுக்குரியது.

வெப்துனியாவைப் படிக்கவும்