த்ரிஷா, வருண்மணியன் திருமணம் நின்று போனதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். உண்மையான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றுக்கு த்ரிஷாவின் அம்மா உமா பேட்டிளித்தார். அதில் திருமணம் நின்றுப் போனதற்கு காரணமாக சில விஷயங்களை கோடிட்டு காட்டியுள்ளார். எஸ், வெறும் கோடுதான்.
திருமணம் நின்றுப் போன விஷயத்தில் சில பெரியவங்க சம்பந்தப்பட்டிருக்காங்க. அதனால எல்லாத்தையும் வாய் திறந்து பேச முடியாது. பேசறது நாகரீகம் கிடையாது. நாங்க ஏதாவது வாய் திறந்து பேசப்போயி, அதைப்பத்தி வேற மாதிரி திரிச்சு எழுதிடுவாங்க. அந்த பெரியவங்களோட மனசு காயப்படுறதுக்கு நாங்க காரணமா இருக்க விரும்பலை என்று கூறியுள்ளார்.
மகளின் திருமணம் நின்றுப் போனதைவிட, அது நின்றுப்போக காரணமானவர்களின் மனசு நோகக்கூடாது என்று கவலைப்படுகிறார் உமா. அந்தளவுக்கு த்ரிஷாவுக்கும், அவர் அம்மாவுக்கும் மதிப்புமிக்க அந்தப் பெரியவர்கள் யார்?