பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஓவியா. இதன் மூலம் ஓவியா புரட்சி படை, ஓவியா ஆர்மி மற்றும் அகில இந்திய ஓவியா பேரவை தொடங்கும் அளவுக்கு சென்றுள்ளது. இந்த ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஓவியா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், கடந்த வாரம் ஓவியா தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி வெளியே செல்ல வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார். இதனால் அவரை வெளியே அனுப்ப பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காகத்தான் இந்த வாரம் நாமினேட் லிஸ்டிலும் அவர் பெயரை கொண்டு வந்துள்ளார்களாம். இதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக ஒரு போட்டியாளராக நடிகை பிந்து மாதவியை கொண்டு வந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.