நயந்தாராவின் காதல் வழ்க்கை கசப்பானதாக இருந்தது. அவரது முதல் காதல் சிம்புவுடன் மலர்ந்து, வல்லவன் படத்தின் மூலமாக நெருக்கமாகி திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டனர். ஆனால் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
விஜய்-நயன்தாராவை ஜோடியாக வைத்து ‘வில்லு’ படத்தை பிரபுதேவா இயக்கியபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த காதல் பிரபுதேவா தன் மனைவியை விவாகரத்து செய்யும் அளவுக்கு கொண்டு சென்றது. நயன்தாராவும் காதலின் வலிமையை உணர்த்த கிறிஸ்தவ மதத்தில் இந்து மதத்துக்கு மாறினார். பின்னர் எதிர்பாராமல் இந்த காதலும் முறிந்து போனது. இருவரும் காரணம் சொல்லாமலேயே பிரிந்து விட்டனர்.
தற்போது நயன்தாரா மார்க்கெட் தற்போது உச்ச நிலையில் இருப்பதால் உடனடியாக திருமணம் இருக்காது என்று தெரிகிறது. ஆனாலும் விக்னேஷ் சிவனை மணக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அடுத்த வருடம் இவர்கள் திருமணம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.