அந்தப் படத்தை விமர்சகர் ஞாநி கிழிக்க, பதிலுக்கு சுசி கணேசன் ஞாநியை கடுப்படிக்க, படமும் ப்ளாப்பாக, மும்பைக்கு வண்டியேறினார் சுசி. திருட்டு பயலே படத்தை இந்தியில் ரீமேக் செய்வதுதான் நோக்கம். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றவும் செய்தார். ஆனால், அடுத்தடுத்து வாய்ப்புகள் வர வேண்டுமே?
மும்பை இனி தேறாது என்ற நிலையில் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். திருட்டு பயலே இரண்டாம் பாகம்தான் சுசியின் டார்கெட். கதை ரெடி. ஆனால், ஆர்யா உள்பட எந்த ஹீரோவும் சுசியின் ரயிலுக்கு தலை கொடுக்க தயாரில்லை.