தெறி டீசருக்கு எதிராக பெரும் சதி: இயக்குனர் அட்லி

சனி, 6 பிப்ரவரி 2016 (00:04 IST)
நடிகர் விஜய் நடித்த தெறி படத்தின் டீசருக்கு எதிராக பெரும் சதி நடைபெற்றுள்ளதாக அப்படத்தின் இயக்குனர் அட்லி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
 

 
நடிகர் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் தகவல் வெளியானது. பின்பு, ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என்றும்,  பொங்கலுக்கு வெளியாகும் என்றும், இதனையடுத்து, ஜனவரி 26 ஆம் தேதியான குடியரசு தினத்தன்று வெளியாகும் என கூறப்பட்டது.
 
இதனால், நடிகர் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் தெறி டீசர் வெளியாகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
 
இந்த நிலையில், பிப்ரவரி 5 ஆம் தேதி தெறி டீசர் வெளியாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி , தெறி டீசர் வெளியானது. தெறி டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பேர் இந்த டீசரைப் பார்த்து ரசித்தனர். சுமார் 50 வினாடிகள் கொண்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால், தெறி டீசர் நிதிரென நிறுத்தப்பட்டது.
 
இது குறித்து, அப்படத்தின் இயக்குனர் அட்லி கூறுகையிஸ்,  யூட்டூப்-பில் தெறி டீசர் திடீரென சிலரது சதியால்  நிறுத்தப்பட்டது. இதற்கு காப்பிரைட் பிரச்சினையாக காரணம் கூறப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் தெறி டீசர் மீண்டும் வெளியானது. இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்