தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டு கூட்டம் சென்னையில் நடந்தது.
மூன்று அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து பேசி, தமிழ் திரைப்படதுறை சம்பந்தமாக ஆக்கப்பூர்வமான செயல்களை வரைமுறைப்படுத்தவும், அரசிடம் பேசி வாங்க வேண்டிய சலுகைகளை கேட்டு வாங்கவும் ஒரு உயர்மட்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில், எஸ்.தாணு, அருள்பதி, அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட திரைப்பட பாதுகாப்பு குழு உருவாக்கப்படுகிறது.
இந்த குழுவின் ஆலோசனைப்படி, குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் நலன் காக்க வேண்டி, மாதத்தில் ஒரு வாரம் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.