‘தி லெஜண்ட்’ படத்தின் வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்

திங்கள், 11 ஜூலை 2022 (14:30 IST)
சரவணன் நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இணையாக சுமார் 800 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தமிழ் நாடு தவிர்த்த இந்தியா தவிர்த்த உலக அளவிலான வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான AP இண்டர்நேஷனல்ஸ் கைப்பற்றியுள்ளது. இது சம்மந்தமான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikil Murukan (@onlynikil)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்