பிக்பாஸை விட்டு வெளியேறிய பிறகு ரியோ வெளியிட்ட முதல் வீடியோ!

வியாழன், 21 ஜனவரி 2021 (08:39 IST)
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அப்போது அதே தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஸ்ருதி என்பவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர்.
 
ரியோ பிரபலமாவதற்கு முன்னரே ஸ்ருதி அவரது நண்பராக இருந்து வந்தார். இவர்கள் இருவரும் அண்ணா யுனிவர்சிட்டியின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது அங்கு ஸ்ருதி திடீர்னு ஸ்ருதி தன் காதலைச்சொல்லி இருக்கிறார். பின்னர் இரண்டு நாள் கழித்து ஸ்ருதிக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ரியோ.
 
பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் ஸ்ருதி கர்ப்பமானார். மனைவிக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் ரியோ. அதைடத்து இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு தங்கள் காதலின் சின்னமாக இருவரின் பெயரை இணைத்து  "ரித்தி" பெயரிட்டு மகிழ்ந்தனர். 
 
இதையடுத்து பிக்பாஸ் சீசன் 4ல் வாய்ப்பு கிடைக்க அதில் பங்கேற்று மக்களின் பேராதரவு பெறவில்லை என்றாலும் அவரது உண்மையான கேரக்டர் மாறாமல் இருந்ததாக அவருடன் பழகியவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸை விட்டு வெளியேறிய பிறகு ரியோ முதன்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி கூறி முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியள்ளார். இதோ அந்த வீடியோ...
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rio Raj (@rio.raj)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்