அக்ஷய் பிரியன் இயக்கும் இந்தப் படத்தில் நாடோடிகள் கிருஷ்ணா பிரதான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு இணை பிரயாகா. மதுரை அருகே அழகர்மலை பகுதியில் ஒரு கிராமத்தை அச்சு அசலாக செட் போட்டு படத்தை எடுத்து வருகின்றனர். கிராமத்து இசைக்கு இளையராஜாவைவிட்டால் வேறு யார். அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.