கரகாட்டத்தை மையமாக வைத்து பாலா எழுதிய கதை தாரை தப்பட்டை. ஸ்கிரிப்டை முழுமையாக முடித்து இளையராஜாவின் இசையில் 12 பாடல்களை ஒலிப்பதிவும் செய்துவிட்டார். கிராமியக் கலையை மையப்படுத்திய படம் என்பதால் தொழில்முறை இசைக்கலைஞர்களை தவிர்த்து நிஜமான கிராமியக் கலைஞர்களை வைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்தார் இளையராஜா.
கடந்த மூன்று மாதங்களாக கரகாட்டத்துடன் நாதஸ்வரம், மிருதங்கள் என பல்வேறு இசைக்கருவிகளை எப்படி இசைப்பது என பயிற்சி எடுத்து வருகிறார். படத்தில் இந்த இசைக்கருவிகளை பயன்படுத்துவதால் காட்சி தத்ரூபமாக வருவதற்காக முறையாக நாதஸ்வரமும், மிருதங்கமும் படித்து வருகிறார். இந்தப் பயிற்சி காரணமாகவே தாரை தப்பட்டையின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை என படயூனிட் தெரிவிக்கிறது.