தமிழில் ஷீர்டி சாய்பாபா குறித்து தயாராகும் படத்தில் அவர் ஷீர்டி சாய்பாபாவாக நடிக்கிறார். இதிலும் அவரது தோற்றம் ஷீர்டி சாய்பாபா போலவே உள்ளது. இந்தப் படத்தை, அபூர்வ மகான் என்ற பெயரில் மணிமுத்து என்பவர் இயக்கி வருகிறார். படம் குறித்து அவர் கூறியதாவது.
படத்தை பார்க்கிற யாருமே உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது. ஒரு கதாப்பாத்திரத்திற்காக வினு சக்கரவர்த்தியை பார்க்க போனோம். அவரால் நடக்கவே முடியாது எப்படி நடிக்க வைப்பீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். நான் போனபோது அவர் படுக்கையில் படுத்திருந்தார். நான் கதாப்பாத்திரத்தை சொல்லி விட்டு, பாபா உங்களுக்கு நல்லதே செய்வார் என கூறிவிட்டு வந்தேன்.
சில நாட்கள் கழித்து அவரே போன் செய்து படப்பிடிப்பு தேதியையும், இடத்தையும் கேட்டார். சொன்னேன் அந்த தேதியில் அவரே காரை விட்டு இறங்கி நடந்து வந்து நடித்துக் கொடுத்தார். டப்பிங்கும் அவரே பேசினார். நடக்கவே முடியாதவர் பாபாவின் ஆசியால் நடித்தது அபூர்வம் தானே. பணம் எதுவுமே வாங்கவில்லை அவர். நிஜமாய் நடந்த அந்த சம்பவம் எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தித் தந்தது" என்றார்.