வீரம் படத்தின் போது, ஒரே மாதிரி கெட்டப்பில் நடிக்காதீங்க என்று அப்பு குட்டியிடம் கூறியிருக்கிறார் அஜீத். நம்மையெல்லாம் வச்சு வித்தியாசமாக யார் சார் படமெடுக்கப் போகிறார்கள் என பதிலளித்துள்ளார் அப்பு குட்டி.
சமீபத்தில் அஜீத்திடமிருந்து அப்பு குட்டிக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவரும் கிளம்பிச் சென்றிருக்கிறார். போன இடத்தில் அவரது அளவுக்கு ஏற்ற விதவிதமான காஸ்ட்யூம்கள் காத்திருந்திருக்கின்றன. அதை அணிய வைத்து அப்பு குட்டியை விதவிதமாக போட்டோ எடுத்துள்ளார் அஜீத். மேலும், அப்பு குட்டியின் இயற்பெயர் சிவபாலனை; என்பதை கேட்டு தெரிந்து கொண்டவர், அவரை சிவபாலன் என்றே அழைத்திருக்கிறார். மற்றவர்களையும் அப்படி அழைக்கும்படி கூறியிருக்கிறார்.