ஜுனியர் என்டிஆரால் தாமதமாகும் தெலுங்கு கத்தி

செவ்வாய், 18 நவம்பர் 2014 (09:48 IST)
விஜய் படம் தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாவதுதான் வழக்கம். துப்பாக்கி அப்படிதான் வெளியானது. துப்பாக்கியை இந்தியில் ரீமேக் செய்வது என்று முருகதாஸ் ஏற்கனவே முடிவு செய்திருந்ததால் துப்பாக்கி தெலுங்கில் ரீமேக் செய்யப்படுமா என்ற பேச்சே எழவில்லை.
 
கத்தி அப்படியில்லை. கத்தியை பாராட்டினாலும் அதன் ரீமேக்கில் நடிக்க சல்மான் கான் ஆர்வம் காட்டவில்லை. அடுத்து பவன் கல்யாணுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது. அவரும் ஆர்வம் செலுத்தவில்லை. இந்நிலையில் ஜுனியர் என்டிஆருக்கு படத்தை திரையிட்டு காட்ட உள்ளனர். 
 
இதன் காரணமாக கத்தியின் தெலுங்கு டப்பிங் வெளியாவது மேலும் தாமதமாகியுள்ளது. என்டிஆர் அடுத்த வாரம் படத்தைப் பார்ப்பார் என்று தெரிகிறது. அவர் கத்தி ரீமேக்கில் ஆர்வம் காட்டினால் கத்தி தெலுங்கு டப்பிங் உடனடியாக நிறுத்தப்படும். இல்லையெனில் அடுத்த வாரமே கத்தியின் தெலுங்கு டப்பிங் திரைக்கு வரும். 

வெப்துனியாவைப் படிக்கவும்