சினிமாக் கலைஞர்களுக்கு இலவசமாக தடுப்பூசி…. தெலுங்கு நடிகர்களின் முன்னெடுப்பு!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (09:03 IST)
தெலுங்கு முன்னணி நடிகர்கள் அப்போல்லோ மருத்துவமனையோடு இணைந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் நிகழ்வினை தொடங்கி வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போதே தெலுங்கு சினிமா முன்னணிக் கலைஞர்கள் பல கோடிகளை வசூல் செய்து தினசரி சம்பளம் வாங்கும் கலைஞர்களுக்கு உதவினர். இந்நிலையில் இப்போது அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் சினிமாக் கலைஞர்கள் மட்டுமல்லாது அவர்கள் குடும்பத்தினரும் இலவசமாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்