வெறிகொண்டு படமியக்கிய தருண்கோபி

செவ்வாய், 31 மார்ச் 2015 (14:09 IST)
திமிரு என்றதும் தருண் கோபியின் பெயர்தான் நினைவு வரும். ஆக்ஷன்பட இயக்குனராக வருவார் என எதிர்பார்த்தவர் காளை படத்தோடு இயக்கத்துக்கு குட்பை சொல்லி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 
 
இருப்பதைவிட்டு பறப்பதுக்கு ஆசைப்படுகிறவர்களின் நிலைதான் தருண்கோபிக்கும் ஏற்பட்டது. நடிக்கவும் படமில்லை, இயக்கவும் படமில்லை.
 
நீண்டை இடைவெளிக்குப் பிறகு வெறி என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ளார். திமிரு பார்ட் 2 வாக தயாராகியிருக்ம் இந்தப் படத்தில் தருண் கோபியுடன் ஸ்ரீமதி என்ற புதுமுகம் நடித்துள்ளார். 
 
இந்தப் படம் தன்னை மீண்டும் கோடம்பாக்கத்தில் நிலைநிறுத்தும் என்பது தருண் கோபியின் நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை.

வெப்துனியாவைப் படிக்கவும்