ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் கலக்க வரும் டாப்ஸி

புதன், 12 அக்டோபர் 2016 (17:46 IST)
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தனுஷ் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
 

 
 
இப்படத்தைத் தொடர்ந்து வந்தான் வென்றான், காஞ்சனா-2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தில் அவருடன் இணைந்து நடித்து ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றார்.
 
இப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டின் ஷபானா என்ற படத்தில் நடிக்கிறார். இது பேபி என்ற படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. இதில் அக்ஷய் குமார், மனோஜ் பாஜ்பாய், பிருத்விராஜ், உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் ஆக்ஷன் ரோலில் டாப்ஸி நடிக்கிறாராம்.
 
இந்த படத்தில் வரும் ரோலுக்காக, இஸ்ரேல் நாட்டின் தற்காப்பு கலையான கிரவ்மஹா, ஜப்பானிய நாட்டின் தற்காப்பு கலை அய்கிடோ போன்றவற்றை கற்று வருகிறார். இதற்காக தனி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, படபிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக இந்த தற்காப்பு கலை கற்று முடித்திருக்க வேண்டும் என்பதற்காக வேகமாக கற்று வருகிறார் டாப்ஸி.

வெப்துனியாவைப் படிக்கவும்