இறந்தபின் எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் எந்த பயனும் இல்லாமல் போகும் உடலை மருத்துவ ஆய்வுக்கு பயன்படுத்தி பல நோய்களை குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனும், உடல் தானத்தில் நமது தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டுமென்ற பேராவலுடனும், மரணத்திற்கு பின் அரசு பொது மருத்துவமனைக்கு அவர்களது உடலை தானமாக கொடுப்பதற்கு முன்வந்து, அதற்கான உறுதிப் பத்திரங்களை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அளித்து, வாழ்த்து பெற வேண்டும் என்ற மனுவினை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன் வழங்கினார்.
அதன்படி முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், துணைத் தலைவர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசு, பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சந்தித்து, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 64 பேர்களின் தன்னார்வ உடல் தானத்திற்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி, வாழ்த்து பெற்றனர்.