அவரது மகன் சண்முக பாண்டியனும் இதில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடக்க விழா நேற்று (நவ.22) அன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜயாகாந்த் “ நான் அரசியலில் இறங்கிய பின், சினிமாவில் நடிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். எனது மகன், சண்முகபாண்டியன் சினிமாவிற்கு வந்து விட்டதால, அவருக்காக எனது மனைவி பிரேமலதாவும், மூத்த மகன் விஜய் பிரபாகரும் பல கதைகளைக் கேட்டு வந்தனர்.