படத்தைவிட தனது செய்கைகளுக்கு விளக்கம் அளித்து அதிக நேரம் பேசினார் டி.ஆர். புலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், புலி... புலி என்று அவர் அடுக்கு மொழியில் அவிழ்த்துவிட என்ன காரணம் தெரியுமா? அவரே சொல்கிறார்.
"நான் புலி படத்தின் விழாவுக்குப் பிறகு சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை. பேசுவதில்லை என்று இருந்தேன். எனக்கு ஒரு ஆதங்கம் இருந்தது. அந்த விழாவில் நான் புலியை அப்படி அடுக்கி வர்ணித்ததை பல லட்சம் பேர் பார்த்தார்கள். பாராட்டினார்கள். ஆனால் சில டிவிகளில் விமர்சித்தார்கள். அவர்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். புலி பற்றி அவ்வளவு நான் பேசக் காரணம் ஈழத்தமிழர்களின் ஆதரவாளன் நான்."