நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் - டி.ராஜேந்தரின் திடீர் ஸ்டேட்மெண்ட்

புதன், 10 பிப்ரவரி 2016 (20:16 IST)
தமிழுக்கு எண் ஒன்றை அபத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் படம் போக்கிரி ராஜா. பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒரு பாடல் சென்னையில் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் டி.ராஜேந்தர்.

 

 
 
படத்தைவிட தனது செய்கைகளுக்கு விளக்கம் அளித்து அதிக நேரம் பேசினார் டி.ஆர். புலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், புலி... புலி என்று அவர் அடுக்கு மொழியில் அவிழ்த்துவிட என்ன காரணம் தெரியுமா? அவரே சொல்கிறார்.
 
"நான் புலி படத்தின் விழாவுக்குப் பிறகு சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை. பேசுவதில்லை என்று இருந்தேன். எனக்கு ஒரு ஆதங்கம் இருந்தது. அந்த விழாவில் நான் புலியை அப்படி அடுக்கி வர்ணித்ததை பல லட்சம் பேர் பார்த்தார்கள். பாராட்டினார்கள். ஆனால் சில டிவிகளில் விமர்சித்தார்கள். அவர்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். புலி பற்றி அவ்வளவு நான் பேசக் காரணம் ஈழத்தமிழர்களின் ஆதரவாளன் நான்." 
 
ஆக, விஜய்க்காக புலியை அவர் பாராட்டவில்லை.
 
விடுதலைபுலிகளின் ஆதரவாளர் என்பதால் அப்படி பேசியிருக்கிறார். இனி டி.ஆரிடமிருந்து பாராட்டுபெற விரும்புகிறவர்கள் படத்தின் பெயரில் புலி வரும்படி பார்த்துக் கொண்டால் போதும்.

வெப்துனியாவைப் படிக்கவும்