மார்ச் 27 ஆம் தேதிக்குப் பிறகு புதுப்படங்கள் இல்லை – டி ராஜேந்தர் அதிரடி முடிவு !

புதன், 11 மார்ச் 2020 (07:41 IST)
தமிழ் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ள முடிவின் படி மார்ச் 27 ஆம் தேதிக்குப் பின் புதிய திரைப்படங்கள் வாங்கி வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட டி ராஜேந்தர் விநியோகஸ்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு மார்ச் 27 ஆம் தேதிக்குப் பின்னர் புதிய படங்களை வாங்கி ரிலீஸ் செய்வதில்லை என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.

விநியோகஸ்தர்களின் சங்கத்தின் இரண்டு தீர்மானங்கள் :-
1.விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை அரசு ஏற்கும் விதமாக மார்ச் மாதம் 27-ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.

2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%)(இந்தவரி தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது) கேளிக்கை வரி செலுத்துவதால் இது பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்