சுஷாந்த் தற்கொலை வழக்கு சிபிஐ க்கு செல்கிறது – மத்திய அரசு ஒப்புதல்!

வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (14:59 IST)
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலை குறித்த வழக்கை  சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தனது 34 ஆவது வயதில் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும் இந்த தற்கொலை குறித்து மும்பை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் சுஷாந்தின் மரணத்துக்கு பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் மற்றும் அவரது முன்னாள் காதலி கொடுத்த மன அழுத்தம் என பலக் காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன.

இதனால் வழக்கு விசாரணை ஒழுங்காக நடக்க வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சுஷாந்தின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சுஷாந்தின் சொந்த மாநிலமான பீஹாரின் முதல்வர் நிதிஷ்குமார் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து இருந்தார்.

இந்நிலையில் இப்போது அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது சம்மந்தமாக நிதீஷ் குமார் இன்று டிவீட் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்