சுசீந்திரனின் அடுத்த பட டைட்டிலை அறிவிக்கும் அம்மா-அப்பா

வியாழன், 7 செப்டம்பர் 2017 (23:20 IST)
பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்துடன் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. 



 
 
இந்த நிலையில் சுசீந்திரன் சப்தமில்லாமல் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மிக முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டதாகவும், மீதி படப்பிடிப்பை வரும் அக்டோபருக்குள் முடிக்க சுசீந்திரன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் இந்த புதிய படத்தின் டைட்டிலை நாளை காலை 10 மணிக்கு சுசீந்திரனின் அம்மா-அப்பா வெளியிடுகின்றனர். அனேகமாக ஒரு இயக்குனரின் படத்தின் தலைப்பை அவரது பெற்றோர்களே அறிவிப்பது கோலிவுட்டில் இதுதான் முதல்முறையாக இருக்கும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்