பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கிறாரா?... யாரு கிளப்பிவிட்டது?

திங்கள், 19 டிசம்பர் 2022 (16:10 IST)
பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில் இயக்குனர் பாலா தரப்பில் இருந்து ஒரு கடிதம் வெளியானது. அதில் “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமோ என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. 

எனவே ’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் தான் பார்த்த சூர்யா, பிதாமகன் - இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ’வணங்கான்’ பணிகள் தொடரும் ” எனக் கூறி இருந்தார்.

இப்போது பாலா வணங்கான் படத்தையே இயக்குவாரா இல்லை வேறு படத்தை இயக்குவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பாலா நடிகர் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவ, அதில் துளி கூட உண்மையில்லை என்று மறுப்புகள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்