24 படத்தில் மீண்டும் சூர்யாவுடன் இணையும் சமந்தா

ஞாயிறு, 15 பிப்ரவரி 2015 (12:24 IST)
அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த சமந்தா மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.



 
அஞ்சானுக்குப் பிறகு சூர்யா வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நயன்தாரா, ப்ரணித்தா நடிக்கின்றனர். மாஸுக்குப் பிறகு விக்ரம் கே.குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடிக்க உள்ளார். 
 
ஏப்ரல் மாதம் தொடங்கயிருக்கும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
விக்ரம் கே.குமாரின் முந்தைய தெலுங்குப் படத்தில் (மனம்) சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பபிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்