சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெள்ளி, 19 நவம்பர் 2021 (15:01 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின்  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் நேற்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை( இன்று) மதியம் 12 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் எனத் தெரிவித்தது.

அதன்படி இன்று எதற்கும் துணிந்தவன்  படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவடி 4 ஆம் தேதி  எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#EtharkkumThunindhavan is releasing on Feb 4th, 2022!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop #SaranyaPonvannan #MSBhaskar @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO #ETOnFeb4th pic.twitter.com/hwuwEkX3Bm

— Sun Pictures (@sunpictures) November 19, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்