எதற்கும் துணிந்தவன்…. போலி துப்பாக்கியுடன் போலிசிடம் சிக்கிய படக்குழுவை சேர்ந்தவர்!

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:52 IST)
சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புக்காக போலி துப்பாக்கிகளை காரைக்குடிக்கு அனுப்ப எடுத்து வந்துள்ளார் அந்த உதவியாளர்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன் தினம் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு தேவையான போலி துப்பாக்கிகளை பேருந்தில் அனுப்புவதற்காக வந்த உதவியாளர் போலிஸிடம் சிக்கியுள்ளார். பின்னர் அந்த துப்பாக்கிகள் சினிமாவுக்கு பயன்படுத்த எடுத்து செல்வதாக சொல்லி சில அது சம்மந்தப்பட்ட பேப்பர்களை காட்டியதும் போலிஸார் அவர்களை விடுவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்