எஸ் 3 படத்தை கேரளாவில் வெளியிடும் சூர்யா ரசிகர் மன்றம்

சனி, 3 டிசம்பர் 2016 (17:02 IST)
இந்த விஷயத்தில் சூர்யாதான் பர்ஸ்ட். இதுவரை நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து கைக்காசை வெலவளிப்பார்கள். 


 
 
முன்பு ரசிகர்மன்ற ஷோ என்ற பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக சிலர் சம்பாதிப்பதும் உண்டு. ஆனால், முதல்முறையாக தங்களுக்குப் பிடித்த நடிகரின் படத்தை அவரது ரசிகர் மன்றமே வெளியிடுகிறது.
 
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எஸ் 3 படம் தமிழகத்தில் வெளியாகும் அதேநாள் கேரளாவிலும் வெளியாகிறது.
 
இப்படத்துக்கான (கேரளா) திருச்சூர் பகுதியின் விநியோக உரிமையை, சூர்யாவின் ரசிகர் மன்றமே கைப்பற்றியிருக்கிறது. ஒரு நடிகரின் படத்தை அவரது ரசிகர் மன்றம் வெளியிடுவது இதுதான் முதல்முறை.
 
ரஜினி, அஜித், விஜய் இதனை முயன்று பார்க்கலாமே.

வெப்துனியாவைப் படிக்கவும்