இயக்குனராகும் எழுத்தாளர் பாலகுமாரனின் மகன்!

திங்கள், 14 ஜூன் 2021 (16:01 IST)
எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் இப்போது இயக்குனராக உள்ளார்.

சூர்யா பாலகுமாரன் சிவகார்த்திகேயனை வைத்து சில குறும்படங்களை எடுத்தவர். அதுமட்டுமில்லாமல் அட்லியின் கதை விவாத குழுவில் நீண்ட காலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ள படத்தில அசோக் செல்வன் நடிக்க உள்ளாராம். இந்த கதையை சூர்யா முதலில் சிவகார்த்திகேயனுக்குதான் எழுதினாராம். ஆனால் அது தள்ளிக்கொண்டே போக, இப்போது அசோக் செல்வன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்