தீபாவளி முடிந்து அடுத்த கட்ட ஷூட்டிங்…. சூர்யா 42 பட அப்டேட்!

வியாழன், 20 அக்டோபர் 2022 (15:48 IST)
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கேஎஸ் ரவிக்குமார் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நாயகியின் தந்தையாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் தீபாவளி முடிந்து அக்டோபர் 26 ஆம் தேதி முதல் மீண்டும் கோவாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்