எந்திரன் இரண்டாம் பாகம் - மீண்டும் ரஜினி, ஐஸ்வர்யா ராய்?

சனி, 21 பிப்ரவரி 2015 (11:59 IST)
சத்ரியனுக்கு சாவு இல்லடா மாதிரி எந்திரனுக்கு சாவு கிடையாது. ரஜினி குறித்த பேச்சு எழும்போதெல்லாம் எந்திரனுக்கு உயிர்பெறும்.
லிங்காவுக்குப் பிறகு ரஜினி சும்மாதான் இருக்கிறார். ஐ முடிந்து ஷங்கரும் ஓய்வில் உள்ளார். இருவரையும் இணைத்து வதந்தி கிளம்பாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
 
இதோ, கோடம்பாக்கத்தின் புதிய வதந்தி இதுதான். எந்திரன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ரஜினி, ஐஸ்வர்யா ராயே நடிக்கின்றனர்.
 
இது எவ்வளவுதூரம் உண்மை தெரியாது. ஆனால் ரஜினி சம்பந்தப்பட்ட விஷயம், வதந்தியானாலும் சொல்லாமல் இருக்க முடியாதே.

வெப்துனியாவைப் படிக்கவும்