சுந்தர் சியின் அடுத்த படத்திலும் தமன்னா தான்.. மீண்டும் மிரட்ட வரும் ‘அரண்மனை’ கூட்டணி..!

Siva

வியாழன், 6 ஜூன் 2024 (13:49 IST)
சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் உருவான அரண்மனை 4 திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சுந்தர் சி யின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது. கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி இயக்குவார் என்றும் மீண்டும் ஒரு த்ரில் படத்தை இயக்க இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி சுந்தர் சி யின் அடுத்த படம் ஒரு திகில் படம் தான் என்றும் இந்த படத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஜெயம் ரவி நடித்த ’பிரதர்’ என்ற படத்தை தயாரித்த ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி, தமன்னா மீண்டும் ஒரே படத்தில் இணைய இருப்பதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ஒரு பிரபல நடிகை சிறப்பு தோற்றத்திலும் நடிகை இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்